திப்பிலி ( 10 ) , சீரகம் (1 ஸ்பூன் ) , மிளகு ( 20 ) ஆகியவற்றுடன் நொய் அரிசி ( கால் கிலோ ) , சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்தால் சளி, இருமல், ஆஸ்துமா, கோழைக்கட்டு போன்றவை தீரும்.
திப்பிலி, அக்கரகாரம், அதிமதுரம் - மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைச்சதை விரைவில் கரையும்.
திப்பிலி ( 10 ) , கிராம்பு (5 ), மிளகு (5 ), மஞ்சள் தூள் ( அரை ஸ்பூன் ) ஆகியவற்றை தண்ணீரில் ( 3 டம்ளர் ) போட்டுக் கொதிக்கவைத்து வாய் கொப்பளித்து வந்தால் காது, மூக்கு, தொண்டைசார்ந்த நோய்கள் குணமாகும்.
திப்பிலியை வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து காயவைத்துப் பொடிசெய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ( நினைவாற்றல் ) அதிகரிக்கும்.
திப்பிலியை எலுமிச்சைசாற்றில் ஊற வைத்துக் காய வைத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல், ஏப்பம் போன்றவை குணமாகும்
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல மருத்துவ ஆலோசகர், Cell : 96557 58609
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணி உறுதியாகுமா? புதுவையில் திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சு!

தொகுதி அறிமுகம் - திருச்சி (மேற்கு)

தொகுதி அறிமுகம்: சங்கரன்கோவில்!

காளிதாஸ் - 2 டிரைலர் வெளியானது!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

