திப்பிலி (10) ,சீரகம் (1ஸ்பூன்), மிளகு (20) ஆகியவற்றுடன் நொய் அரிசி (கால் கிலோ), சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால் சளி, இருமல், ஆஸ்துமா, கோழைக்கட்டு போன்றவை தீரும்.
திப்பிலி, அக்கரகாரம், அதிமதுரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைச்சதை விரைவில் கரையும்.
திப்பிலி (10), கிராம்பு (5), மிளகு (5), மஞ்சள் தூள் (அரை ஸ்பூன்) ஆகியவற்றை தண்ணீரில் (3 டம்ளர் ) போட்டுக் கொதிக்கவைத்து வாய் கொப்பளித்து வந்தால் காது, மூக்கு, தொண்டைசார்ந்த நோய்கள் குணமாகும்.
திப்பிலியை வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து காயவைத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
திப்பிலியை எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து காயவைத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல், ஏப்பம் போன்றவை குணமாகும்
திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் 1 மாதம் சாப்பிட்டு வந்தால் தேமல் குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com