தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

இன்றைய மருத்துவ சிந்தனை திப்பிலி 

திப்பிலி (10) ,சீரகம் (1ஸ்பூன்),  மிளகு (20) ஆகியவற்றுடன் நொய் அரிசி (கால் கிலோ),

News image
Updated On :26 ஏப்ரல் 2017, 12:27 pm

DIN

திப்பிலி (10) ,சீரகம் (1ஸ்பூன்),  மிளகு (20) ஆகியவற்றுடன் நொய் அரிசி (கால் கிலோ), சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால் சளி, இருமல், ஆஸ்துமா, கோழைக்கட்டு போன்றவை தீரும்.

திப்பிலி, அக்கரகாரம், அதிமதுரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைச்சதை விரைவில் கரையும்.

திப்பிலி (10), கிராம்பு (5), மிளகு (5), மஞ்சள் தூள் (அரை ஸ்பூன்) ஆகியவற்றை தண்ணீரில் (3 டம்ளர் ) போட்டுக் கொதிக்கவைத்து வாய் கொப்பளித்து வந்தால் காது, மூக்கு, தொண்டைசார்ந்த நோய்கள் குணமாகும்.

திப்பிலியை வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து  காயவைத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.

திப்பிலியை எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து காயவைத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல், ஏப்பம் போன்றவை குணமாகும்

திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் 1 மாதம் சாப்பிட்டு வந்தால் தேமல் குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.