சுக்கில் இவ்வளவு நன்மைகளா? 

சுக்கு, வேப்பம்பட்டை  இரண்டையும் சேர்த்து  கஷாயம் செய்து குடித்து வர ஆரம்ப நிலை  வாதம் குணமாகும்.
சுக்கில் இவ்வளவு நன்மைகளா? 
  • சுக்குடன் சிறிது பால் சேர்த்து மையாக அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை கால் மூட்டுகளில் பூசி வர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
  • சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
  • சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இந்த ஐந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகி வர கடுஞ்சளி மூன்றே நாளில் குணமாகும்.
  • சிறிது  சுக்குடன் ஒரு வெற்றிலையை மென்று தின்றால் வாயுத் தொல்லை நீங்கும்.
  • சுக்கு, வேப்பம்பட்டை  இரண்டையும் சேர்த்து  கஷாயம் செய்து குடித்து வர ஆரம்ப நிலை  வாதம் குணமாகும்.
  • சுக்கில் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து நெற்றியில் பற்றிட  தலைவலி  போய்விடும்.
  • சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சிக் குடித்து வர,  உடல் அசதி சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
  • சுக்குடன் தனியா வைத்து சிறிது நீர் தெளித்து மையாக அரைத்து உண்டால் அதிக மருந்து அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை அடையும்.
  • சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி அகலும்.
  • சுக்கு, மிளகு, சீரகம்,  பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்து வர மாந்தம் குணமாகும்.
  • சுக்குடன் மிளகு சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து பூசி வர தொண்டைக்கட்டு மாறும். குரல் இயல்பு நிலை பெறும்.
  • சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
  • சிறிது சுக்குடன் சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
  • சுக்குடன் கொத்துமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூல நோய் தீரும்.
  • சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
  • சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும். 
  • தயிர் சாதத்துடன் சிறிது சுக்குப் பொடி இட்டு சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்.
  • சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாள் குடித்து வர விஷக்காய்ச்சல் குறையும்.
  • சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர நீர்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
  • சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வர ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றத்தை விலக்கும்.
  • (உணவே மருந்து -நூலிலிருந்து )

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com