எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

உறவு வேட்கையைத் தூண்டி எல்லையில்லா இன்பத்தை தரும் உணவு

முதலில் கீரையை சுத்தம் செய்து அரிந்து அதனுடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து பின்பு நன்றாக கடைந்து கொள்ளவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 3:03 pm IST


பசலைக் கீரைக் காரக் குழம்பு
 
தேவையான பொருட்கள்

பசலைக் கீரை - ஒரு கட்டு
பச்சை மொச்சைக் கொட்டை - 200 கிராம்
மிளகு -  மூன்று ஸ்பூன்
பூண்டு - 10 பல்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று 
சீரகம், மஞ்சள், உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு   

செய்முறை : முதலில் கீரையை சுத்தம் செய்து அரிந்து அதனுடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து பின்பு நன்றாக கடைந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் வெங்காயம், தக்காளியை அரிந்துப் போட்டு வதக்கி அதனுடன் சீரகத்தைப் பொடி செய்து சேர்த்து வதக்கவும். பின்பு அதனுடன் பூண்டையும் நறுக்கிப் போட்டு சேர்த்து வதக்கி பின்பு பச்சை மொச்சைக் கொட்டை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்த பிறகு புளியைக் கரைத்துச் சேர்க்கவும். மொச்சைக் கொட்டை நன்கு வெந்தப் பிறகு, அதனுடன் கீரையையும் சேர்த்து  நன்றாக கலக்கி இறுதியில் கடுகு, உளுந்தப் பருப்பு போட்டு தாளித்து இறக்கவும்.

பலன்கள் : இந்த பசலைக் கீரைக் காரக் குழம்பை உடல் வேட்கையில் திருப்தி இல்லாதவர்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உறவு வேட்கையில் எல்லையில்லா இன்பத்தை கொடுக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.