காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பித்தத்தை தணித்து பசியைத் தூண்டும் அற்புதமான உணவு

முதலில் கறிவேப்பிலையை வாணலியில் போட்டு நன்கு மொறு மொறுப்பாக வறுத்துக் கொள்ளவும்.

Published On :

கறிவேப்பிலை தொக்கு

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை - அரை கிலோ
மிளகு -  25 கிராம்
கடுகு -  ஒரு ஸ்பூன்
உளுந்தம் பருப்பு -  50 கிராம்
பெருங்காயம்  -  5 கிராம்
நல்லெண்ணெய் -  50 மி.லி
புளி - எலுமிச்சம் பழ அளவு
உப்பு -  தேவையான அளவு

Story image

செய்முறை : முதலில் கறிவேப்பிலையை வாணலியில் போட்டு நன்கு மொறு மொறுப்பாக வறுத்துக் கொள்ளவும். பின்பு சிறிது எண்ணெய் விட்டு அதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், மிளகு அனைத்தையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை மற்றும் வறுத்து வைத்துள்ள பொருட்களை உரலில் போட்டு இடித்தோ அல்லது மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் புளி சேர்த்து  அனைத்தையும் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

Story image

பலன்கள் : இந்த கறிவேப்பிலை தொக்கை  தினமும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் அதிகப் படியான பித்தத்தை தணித்து நன்கு பசியை தூண்டக் கூடிய அற்புதமான உணவாக பயன்படும்.

Story image

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

Story image

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.