கேரட் துவையல்
தேவையான பொருட்கள்
கேரட் - 100 கிராம்
கடலைப் பருப்பு - 30 கிராம்
சிறு பருப்பு - 20 கிராம்
மிளகு - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை : கேரட்டை நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப் பருப்பு மற்றும் சிறுபருப்பை வறுத்துக் கொள்ளவும். பின்பு கேரட்டுடன் பருப்பு மற்றும் மிளகு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து துவையலாக்கிக் கொள்ளவும்.
பயன்கள் : இந்த துவையலை தினமும் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நீங்கும். குடல் புண்ணை ஆற்றும் ஆற்றல் இந்த துவையலுக்கு உண்டு. மேலும் புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த துணை உணவாக தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டில் நகை, பணம் திருட்டு: இரு சிறாா்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் பொய்சாட்சியம் அளிக்க முயன்ற பெண் கைது

ஜம்மு-காஷ்மீரில் ஒரு மாதத்தில் 260 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 646 போ் கைது!!

ஆலங்குளத்தில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

