தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உளுந்து வடை சுவையாக இருக்க என்ன செய்யலாம்?

கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையையும் சேர்த்து அரைத்தால் சுவையும், வாசனையும் அருமையாக இருக்கும்.

News image
crispy vadai
Updated On :30 அக்டோபர் 2019, 9:35 am

DIN

  • முள்ளங்கியை சிறிது சர்க்கரையுடன் சேர்த்து வேக வைத்தால் நல்ல வாசனையுடனும், சுவையாகவும் இருக்கும்.
  • ஃபில்டரில் காப்பி பொடியைப் போடும் முன்பு 1துளி உப்பு போட்டு பிறகு காப்பி பொடியைப் போட்டால் காப்பி டிகாஷன் ஸ்ட்ராங்காகவும் சுவையாகவும் இருக்கும்.
  • இட்லி, தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும் போது ஒரு தேக்கரண்டி சீரகத்தையும் பருப்புடன் சேர்த்து அரைத்தால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
  • கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையையும் சேர்த்து அரைத்தால் சுவையும், வாசனையும் அருமையாக இருக்கும்.
  • தேன்குழல் செய்ய மாவு அரைக்கும் போது வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து அரைத்தால் தேன்குழல் மிகவும் சுவையாக இருக்கும்.
  • பாசிப் பருப்பை ஊற வைத்து அரைத்துக் கொண்டு தேங்காய், வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து வடை தட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.
  • டீயில் இரண்டு துளிகள் பன்னீரை விட்டு சாப்பிட்டால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
  • துவையல் அரைக்கும்போது கொஞ்சம் எலுமிச்சம் இலைகளைச் சேர்த்து அரைத்தால் துவையல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
Story image
  • இரண்டு தம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.
  • ரவா, மைதா போன்ற தோசைகளுக்கு கரைக்கும் மாவில் சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டால், தோசை மெத்தென்று சுவையாக இருக்கும்.
  • தோசை மாவு நீர்த்து விட்டால், அந்த மாவில் இருந்து கொஞ்சம் எடுத்து அதில் சோள மாவு, வெறும் வாணலியில் வறுத்த மைதா மாவு இவற்றைக் கரைத்து தோசை மாவில் சேர்த்துவிட்டால் மாவு கெட்டியாகும், சுவையும் மாறாமல் இருக்கும்.
  • காலையில் செய்த சாதம், பொரியல் மீந்து விட்டால் இரண்டையும் நன்றாக மசித்து, வதக்கிய வெங்காயத் துண்டுகளை சேர்த்து கட்லெட் செய்யலாம்.
  • அவசரமாக சாம்பார் செய்ய, பாசிப்பருப்பை அரை பதத்தில் வேக வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொண்டு அதில் பச்சை மிளகாய், தக்காளி துண்டுகள் சேர்த்து தாளித்தால் அற்புதமான சாம்பார் தயார். 
  • ஜவ்வரிசியை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து ஆறியதும் அதில் தயிர், உப்பு, நறுக்கிய கொத்துமல்லி, மிளகாய், கடுகு சேர்த்து தாளித்து ஊறவிட்டால் வித்தியாசமான பச்சடி தயார்.

- ஆர். பூஜா, ஏ.எஸ். கோவிந்தராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.