கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தாம்பத்தியத்தில் பிரச்னையா? உடல் சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை பச்சரிசிக் கஞ்சி!

உடலுக்குத் தேவையான சக்தியையும் வலிமையையும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கக் கூடிய உன்னதமான உணவுக் கஞ்சி இது

News image
Updated On :26 செப்டம்பர் 2019, 8:22 am

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 100 கிராம்
முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி
கடலைப் பருப்பு - 10 கிராம்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
இலவங்கைப் பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
தோலுரித்த பூண்டு - 10

முருங்கை இலை

முருங்கை இலை

செய்முறை : 

முதலில் பச்சரிசியைக் களைந்து வடிகட்டி மிக்ஸியில் போட்டு நொய்யாக உடைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பச்சரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு 600 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அத்துடன் கடலைப் பருப்பு, வெந்தயம், தோலுரித்த பூண்டுப் பல், முருங்கைக் கீரை ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்க வேண்டும். ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அவற்றில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை வறுத்துக் கொள்ளவும்.

நொய்யரிசி நன்கு வெந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து பின்பு அதனுடன் வறுத்து வைத்துள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்

இந்தக் கஞ்சி உடல் சோர்வு மற்றும் வயிற்றில் காற்றுப் பிடித்தல் போன்ற உணர்வு மற்றும் தீராத மலக்கட்டு பிரச்சனைகளையும் தீர்க்கும்.

முருங்கைக் கீரை பச்சரிசிக் கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால், உடலுக்குத் தேவையான சக்தியையும் வலிமையையும்  தரும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி இது. ஆண்கள் மட்டுமில்லை பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்றது.

Story image

குறிப்பு 

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.