ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

லஞ்சம்: ராணுவ டாக்டர் கைது

அம்பாலா, அக்.8: ராணுவ பணிகளுக்கு தேர்வாகியுள்ள நபருக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழ் அளிக்க லஞ்சம் பெற்றதாக டாக்டரை சி.பி.ஐ. சனிக்கிழமை கைது செய்தது. ஹரியாணா மாநிலத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இ.என்

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

அம்பாலா, அக்.8: ராணுவ பணிகளுக்கு தேர்வாகியுள்ள நபருக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழ் அளிக்க லஞ்சம் பெற்றதாக டாக்டரை சி.பி.ஐ. சனிக்கிழமை கைது செய்தது.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் இ.என்.டி. துறை சிறப்பு மருத்துவராக பணி செய்பவர் வி.எஸ்.யாதவ். ராணுவத்தில் தேர்வாகியுள்ள நபருக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழ் அளிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சனிக்கிழமை பிற்பகல் அந்த நபருக்கு ராணுவத்தில் சேர மருத்துவ தகுதி இல்லை என்று மருத்துவர் யாதவ் சான்றளித்திருந்தார். இதையடுத்து தம்மை சந்தித்த அந்த நபரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தந்தால் மட்டுமே தகுதிச் சான்றிதழ் அளிக்க முடியும் என்று அவர் கூறியதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அந்த நபர் சி.பி.ஐ.க்கு புகார் அளித்தார். புகாரை ஏற்ற சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்படி யாதவ் மீது வழக்கு பதிவு செய்தது. யாதவை கையும் களவுமாக பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி, தனது இல்லத்தில் லஞ்சப் பணம் பெற்ற யாதவை சி.பி.ஐ. கைது செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.