சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஹெலிகாப்டர் பேர ஊழல்: சிபிஐ வசம் புதிய ஆவணங்கள் ஒப்படைப்பு

இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரித்து வரும் சிபிஐயிடம், மத்திய

Updated On :1 மார்ச் 2013, 7:58 pm

இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரித்து வரும் சிபிஐயிடம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் புதிய ஆவணங்களை வெள்ளிக்கிழமை அளித்தது.

ஆனால், எத்தகைய தகவல்கள் அளிக்கப்பட்டன என்பதைத் தெரிவிக்க சிபிஐ மறுத்து விட்டது. ஹெலிகாப்டர் ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் விமானப் படை தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட 11 நபர்கள் மீது முதற்கட்ட விசாரணை அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இவர்களிடத்தில் அடுத்த வாரம் முதல் விசாரணையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்தது.

இந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு, வருமான வரித்துறை மற்றும் கணக்குத் துறை அதிகாரிகளின் உதவியை நாட சிபிஐ திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.