மேகாலய சட்டப் பேரவையில் முதன் முதலில் பழங்குடி இனத்தைச் சேராத ஒருவர் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. புல்பாரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் மண்டல், மலையக மாநில மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஆர்டெண்ட் பசையாமொய்ட் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
ஆர்டெண்டின் விண்ணப்பத்தை வழிமொழிய யாரும் முன்வரவில்லை என்பதால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவைத் தலைவராக மண்டல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேகாலய சட்டப்பேரவை வரலாற்றில் பழங்குடி இனத்தைச் சேராத ஒருவர் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாகும். அவருக்கு முதல்வர் முகுல் சங்மா, முன்னாள் முதல்வர்கள் டி.டி. லபாங், எஸ்.சி. மராக் மற்றும் அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
11 அமைச்சர்கள்: மேகாலய சட்டப்பேரவையில் ரோவல் லிங்டோ, ராய்ட்ரே சி லாலு, ஹெச்.டி.ஆர்.லிங்டோ, பி.டிங்சாங், ஏ.லேக், ஜெனித் சங்மா, கிளமெண்ட் மராக், ஸ்னியாபலாங் தர் மற்றும் மூன்று பெண்கள், அமைச்சர்களாக செவ்வாய்க்கிழமை பதவி ஏற்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்!

ஜன நாயகன் திருட்டு எப்படி நடந்தது? சிந்திக்க வைக்கும் சேரனின் பதிவு!

அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி; இன்ப அதிர்ச்சியளித்த விராட் கோலி!

”அந்த வலி எனக்குப் புரியும்! யாரும் Leak-ஆன படத்தை பார்க்க வேண்டாம்!” சுந்தர். சி பேட்டி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

