2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அளித்த வரைவு அறிக்கையை அக்குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.
முன்னதாக பாஜக, ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, திமுக, பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் கடந்த வாரம் மக்களவைத் தலைவர் மீரா குமாரை சந்தித்தனர். அப்போது ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் அக்கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் ஜேபிசி செயலகத்துக்கு தனித்தனியாக கடிதங்கள் எழுதியுள்ளனர். அதில் 2ஜி அலைக்கற்றை தொடர்பாக ஜேபிசி விசாரணை நடத்தி அளித்த வரைவு அறிக்கையை தாங்கள் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஜேபிசி மொத்தம் 30 உறுப்பினர்களைக் கொண்டது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஜேபிசி வரைவு அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது எந்த தவறும் இல்லை என்றும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீதுதான் தவறு என்றும் கூறப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






