தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

உணவு பாதுகாப்பு மசோதா: நாளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டம்

உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முனைப்புடன் உள்ள காங்கிரஸ் அது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுடம் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளது. இது விஷயமாக காங்கிரஸ் உயர்நிலைக் குழு தில்லியில் சனிக்கிழமை கூடியது.

Updated On :1 ஜூன் 2013, 5:42 pm

உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற முனைப்புடன் உள்ள காங்கிரஸ் அது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளுடம் கருத்தொற்றுமை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளது. இது விஷயமாக காங்கிரஸ் உயர்நிலைக் குழு தில்லியில் சனிக்கிழமை கூடியது.

இதில், உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த அடுத்த கட்ட முயற்சியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை திங்கள்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு மசோதா தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜுன் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.

அதில் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பொதுக் கருத்தை ஏற்படுத்த ஆளும் கூட்டணி முயற்சி மேற்கொள்ளும். அதற்கு முன்பாக தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் மசோதா தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மசோதா ஒருமனதாக நிறைவேற்ற எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டால், அதனை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்த இருக்கிறார்.

முன்னதாக நடைபெற்ற காங்கிரஸ் உயர் நிலைக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமை வகித்தார். பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

சோனியா காந்தியின் கனவுத் திட்டமாக உணவுப் பாதுகாப்பு மசோதா உள்ளது.

இதன்படி 67 சதவீதம் மக்களுக்கு ஒரே சீராக ரூ.1 முதல் 3-க்கு மாதம்தோறும் 5 கிலோ உணவு தானியம் நியாய விலைக் கடைகள் மூலம் கிடைக்க இந்த மசோதா வகை

செய்கிறது.

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும் பல்வேறு பிரச்னைகளால் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியதால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.