தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

காகிதப் பை செய்ய சஞ்சய் தத்துக்கு பயிற்சி

புணே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு காகிதப் பைகளை செய்ய பயிற்சி தரப்படுகிறது. அவரது உழைப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஊதியம் தரப்படும்.

News image
Updated On :1 ஜூன் 2013, 11:16 pm IST

புணே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு காகிதப் பைகளை செய்ய பயிற்சி தரப்படுகிறது. அவரது உழைப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஊதியம் தரப்படும்.

கடந்த 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பின் போது ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு உச்சநீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதையடுத்து அவர் புணேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உயர்தரமான, கனமான 6 முதல் 8 கிலோ எடை கொண்ட காகிதப் பைகள் தயாரிப்பது தொடர்பாக சஞ்சய் தத்துக்கு பயிற்சி அளிக்கப்படும். தற்போது இவை தான் கடைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.

அவரது பணி, செயல்பாட்டைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.40 வரை ஊதியம் தரப்படும் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவருக்குள்ள மிரட்டல்களை அடுத்து பலத்த பாதுகாப்புடன் கூடிய இடத்தில் பயிற்சி தரப்படும்.

சஞ்சய் தத் கடினமான பணிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறை நிர்வாகம் அதை அனுமதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.