தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம்: அண்ணா ஹசாரே பிரதமருக்கு கடிதம்

ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி வரும் அக்டோபர் மாதம் தில்லியில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கப் போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 11:13 pm IST

ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி வரும் அக்டோபர் மாதம் தில்லியில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கப் போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011-ம் ஆண்டு அரசு உறுதிமொழி அளித்தபடி ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றவில்லை. ஊழலால் நாட்டில் விலைவாசி பெருகி வருகிறது. இதைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வரும் அக்டோபர் மாதம் முதல் தில்லி ராம்லீலா மைதானத்தில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்வேன். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் ஜனலோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என அரசு உறுதி கூறியதால் முன்பு உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.

பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற போதிலும், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அரசு ஆதரவு திரட்டி இருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலின் போது அரசால் பெரும்பான்மையை பெற முடிந்தது.

ஆனால் ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசால் முடியவில்லை.

இது ஊழலை ஒழிக்க அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது. மக்கள் சாசனம், வலுவான லோக்பால் மசோதா, அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் விசாரணை வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

ஆனால் அரசு எதையுமே செய்யவில்லை என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.