மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

திருமலையில் சிறுத்தை நடமாட்டம் காட்டுக்குள் விரட்டியடிப்பு

திருமலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.

Updated On :1 ஜூன் 2013, 9:44 pm

திருமலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.

திருமலையில் உள்ள சப்தகிரி பக்தர்கள் தங்கும் வாடகை அறை அருகில் உள்ள ஒற்றையடிப் பாதையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்ற தேவஸ்தான

ஊழியர் ஒருவர் மீது அங்கு மறைந்திருந்த சிறுத்தை தாக்கியதாம்.

அங்கிருந்து தப்பிய அவர், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்திற்கு விவரத்தைத் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் வனத்துறை குழுவுடன் வந்து, அதிக சப்தம் எழுப்பி சிறுத்தையை காட்டிற்குள் விரட்டினர்.

ஏழுமலையானை தரிசிக்க 17 மணிநேரம்: சுவாமி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 17 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்தில் 8 மணிநேரமும் சனிக்கிழமை காத்திருந்தனர். ரூ.300 விரைவு தரிசனம் மதியம் ரத்து செய்யப்பட்டது. அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணி வரை 40 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.