மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

நக்சல் தாக்குதல்: சாவு எண்ணிக்கை 28ஆக உயர்வு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்புப் படை அதிகாரி சியாராம் சிங் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :2 ஜூன் 2013, 12:16 am IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்புப் படை அதிகாரி சியாராம் சிங் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

இத்துடன், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்தது.

காங்கிரஸ் தலைவர்கள் மீது கடந்த சனிக்கிழமை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மகேந்திர கர்மா உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்டனர். 37 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சியாராம் சிங் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் சந்தீப் தேவ் தெரிவித்தார். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சியாராம் சிங், தாக்குதலில் கொல்லப்பட்ட மகேந்திர கர்மாவின் பாதுகாப்புப் படை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.