இந்திய எல்லைக்குள் வெடிகுண்டுகளுடன் நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, அவர் வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் உடல் சிதறி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதி சௌஜியான் எனுமிடத்தில் திங்கள்கிழமை நடந்தது.
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவலும், அங்கிருந்து இந்திய பகுதிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த ஜூன் 26-ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், காஷ்மீரில் குவாஸிகண்ட்- பனிகல் பகுதிக்கு இடையே ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். அதற்கு முந்தைய தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








