திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது 18 என்று இருப்பதைப் போலவே, சொந்த மனைவியாக இருந்தாலும் 18 வயதுக்குப் பிறகே உடலுறவு கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று "ஐ-தாட்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மனைவி 15 வயதுக்குக் குறைவாக இல்லாமல் இருந்தால் - அதாவது 15 வயதாகியிருந்தால் - அவருடைய சம்மதத்துடன் உடலுறவு கொள்ளலாம் என்று இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 375-ஆவது பிரிவுக்கு, சமீபத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்தே தன்னார்வத் தொண்டு நிறுவனம் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது.
இந்த மனு நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்குரைஞர் விக்ரம் ஸ்ரீவாஸ்தவ் ஆஜரானார்.
"மேஜர்' என்பதற்கான வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களின் ஒப்புதலுடன் பாலுறவு வைத்துக் கொள்வதற்கான வயதையும் 18 ஆக நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என விக்ரம் கேட்டுக் கொண்டார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

