காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார், தோடா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 3.4 அலகுகளாக பதிவானது.
வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளி பகுதிகளில் சென்று தங்கினார்கள்.
இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இதே பகுதிகளில் சனிக்கிழமையும் 2.9 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


