தனி தெலங்கானா மாநிலம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய சமூகநலத்துறை அமைச்சர் பல்ராம் நாயக் தெரிவித்தார்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க சனிக்கிழமை மாலை திருமலைக்கு மத்திய அமைச்சர் பல்ராம் நாயக் வந்தார். அவரை திருப்பதி திருமலை தேவஸ்தான உயர் அதிகாரிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வரும் 12ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தனி தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
தெலங்கானாவை எதிர்த்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது வீண். தனி தெலங்கானா மாநிலம் உருவாகப் போவதாக அறிவித்ததை மத்திய அரசு திரும்பப் பெறும் நிலையில் இல்லை.
மேலும் ஹைதராபாத் என்பது ஆந்திரத்தில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவானதாகும். யாரும் யாரையும் வெளியில் அனுப்ப உரிமை இல்லை.
அப்படி யாராவது அதைத் தடுத்தால் அதற்காக போராடாமல் மத்திய அமைச்சர் அந்தோனி தலைமையிலான கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புகார் தெரிவிக்கும்போது அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விடுதி அறையில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை?

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு

பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்: செளமியா அன்புமணி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

