நடிகை ஜோதிகா தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்தினார். குழந்தை வளர்ப்பு, அவர்களின் கல்விகளைக் கவனிப்பது போன்ற குடும்பப் பொறுப்புகளால் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர் 36 வயதிலே மூலம் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார்.
தொடர்ந்து, உடன் பிறப்பே, காதல் தி கோர் ஆகிய படங்கள் வெளியாகி ஜோதிகாவை மீண்டும் திரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தற்போது மும்பைக்குக் குடிபெயர்ந்து, ஹிந்தி திரைப்படங்கள், இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இறுதியாக, சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா நடிப்பில் சிஸ்டம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதற்கு முன் ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகியவை வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றிருந்தது. டப்பா கார்டெல் இணையத் தொடர் மூலம் நல்ல நடிகை என்கிற பெயரும் கிடைத்தது. தற்போது, ஜோதிகாவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் தொடர்ந்து பாலிவுட் படங்களில் கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Actress Jyothika continues to focus on Bollywood films.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரன்வீர் சிங் பாலிவுட்டில் நடிக்கத் தடை?
வீடே கொண்டாட்டமாக இருக்கிறது: ஜோதிகா
கோலிவுட் ஸ்டூடியோ!

தும்பாட் - 2 வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




