கடந்த 12 ஆண்டுகளில் தரமான மருத்துவ சேவைகளை மக்களுக்கு எளிதில் கிடைக்கும் விதமாக மாற்றியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான இந்தியா திட்டம் தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவடைந்தது பற்றி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கடந்த 12 ஆண்டுகளாக சிறந்த தரமான மருத்துவ சேவையை எளிதில் கிடைக்குமாறு மாற்ற இந்தியா பாடுபட்டு வருகின்றது.
நலிவடைந்த மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தைக் கொண்ட நாடு என்பதில் நாம் பெருமைகொள்ள வேண்டும்.
பிரதம மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா திட்டத்தின் மூலம் மருந்துகள் மலிவான விலையில் கிடைக்கின்றன. ஸ்டெண்ட்கள் மற்றும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையின் போன்றவை அனைவரும் செலுத்தக்கூடிய விலையில் உள்ளதால் மக்கள் அதிகளவில் பயனடைந்துள்ளனர்.
அதேநேரத்தில், அதிகமான கல்வி நிறுவனங்களும் இடங்களும் உருவாக்கப்பட்டதால், மருத்துவப் படிப்புகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் உள்ளன. ஆரோக்கியமான இந்தியாவைக் கட்டமைத்த இந்தத் தளத்தில் மேலும் கட்டமைப்புகளை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Summary
India has the world's largest healthcare system: PM Modi
தொடர்புடையது

பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!

ஜி7 உச்சிமாநாட்டுக்கிடையே அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டம்!

51,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர் மோடி!

10 கோடி பார்வையாளர்களைக் கடந்த மோடி - மெலோனி விடியோ!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



