பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நவாஸ் ஷெரீபுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்காக நவாஸ் ஷெரீபுக்கும் அவரது கட்சிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இரு தரப்புக்கும் வசதியான நேரத்தில் இந்தியாவுக்கு வருமாறு ஷெரீபுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
மேலும், வன்முறை தொடர்பான அச்சுறுத்தல்களை முறியடித்து, பெருவாரியாக வாக்களித்த மக்களையும், தேர்தலில் பங்கேற்ற அரசியல் கட்சிகளையும் அவர் வாழ்த்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய சகாப்தத்தைத் தொடங்குவதில் பாகிஸ்தானின் புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற இந்தியா ஆர்வம் கொண்டிருப்பதை பிரதமர் வெளிப்படுத்தினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? பிரதமருக்கு கார்கே கேள்வி!







