குஜராத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற 14-வயது சிறுமி பலி

குஜராத் மாநிலம் சபர்மதி அருகே இன்று ரயில்வே கேட் அருகே காத்திருந்த பள்ளி மாணவி, ரயிலில் அடிபட்டு இறந்தார்.
Updated on
1 min read

குஜராத் மாநிலம் சபர்மதி அருகே இன்று ரயில்வே கேட் அருகே காத்திருந்த பள்ளி மாணவி, ரயிலில் அடிபட்டு இறந்தார்.

சபர்மதி அருகேயுள்ள நியூ ரனீப் பகுதியில் உள்ள சிவ-தர்ஷன் குடியிருப்பைச் சேர்ந்தவர் மான்ஷி திவாரி (14). இங்குள்ள ஞானதீப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று பிற்பகல் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மான்ஷி, வீட்டு அருகேயுள்ள ரயில்வே கிராஸ்சிங் கதவு அடைக்கப்பட்டிருந்ததால், தனது சைக்கிளை நிறுத்தி அதன் மீது அமர்ந்திருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த ஆனந்த்- காந்திநகர் ரயிலியின் கடைசிப் பெட்டியின் படிக்கட்டுகள், மான்ஷியின் சைக்கிளின் முன் சக்கரத்தில் மாட்டியது. இதில் தூக்கி தரையில் வீசப்பட்ட மான்ஷி, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து சபர்மதி ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com