புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

திருச்சூர் வெடிவிபத்தில் சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதால், பலி எண்ணிக்கை உயரலாம் என தகவல்

Thrissur blast

திருச்சூர் வெடி விபத்து - PTI

Published On :

திருச்சூர் வெடிவிபத்தில் சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதால், பலி எண்ணிக்கை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளத்தில் ஏப்ரல் 26-ல் நடைபெறவுள்ள பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவுக்காக பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் கோடை வெய்யிலில் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். சம்பவத்தின்போது, அங்கு 38 பேர் இருந்திருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, வெடிவிபத்துக்கு மத்தியில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த சோதனையின்போது மேலும் சில உடல் பாகங்கள் இருப்பதை மோப்ப நாய்கள் கண்டறிந்தன.

சம்பவ இடத்தில் 125 அதிகாரிகள் மற்றும் 5 நாய்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேலும் 5 உடல் பாகங்கள் கண்டறியப்பட்டன.

இதுவரை, சுமார் 132 உடல் பாகங்கள் மீட்கப்பட்டு, திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, அங்கு டி.என்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

மீட்கப்பட்ட உடல்களில் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை பிரித்தெடுக்கவும், காணாமல் போனவர்களின் உறவினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் அவற்றை பொருத்தும் பணியிலும் நிபுணர்களின் குழு ஈடுபட்டுள்ளது.

Summary

More body parts recovered in Thrissur fireworks blast; search continues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.