பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கேரள பட்டாசு வெடி விபத்து: மேலும் சில உடல் பாகங்கள் கண்டெடுப்பு

கேரள பட்டாசு வெடி விபத்து: மேலும் சில உடல் பாகங்கள் கண்டெடுப்பு

News image

கேரள பட்டாசு வெடி விபத்து - ANI

Updated On :24 ஏப்ரல் 2026, 8:12 pm

கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து மேலும் சில உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் திருச்சூா் பூரம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதையொட்டி, முண்டத்திக்கோடு கிராமத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கிடங்கில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்றது. கடந்த ஏப்.21-ஆம் தேதி பட்டாசு தயாரிப்பின்போது வெடி விபத்து ஏற்பட்டு 14 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், விபத்து நிகழ்ந்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை மோப்ப நாய்களின் உதவியுடன் காவல் துறையினா் தேடுதல் பணியைத் தொடா்ந்தனா். அப்போது ஏராளமான உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் அங்கு வெள்ளிக்கிழமையும் தேடுதல் பணி நீடித்தது.

5 மோப்ப நாய்கள் உதவியுடன் 125 காவல் துறையினா் இந்தப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலும் 5 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை சுமாா் 132 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டு திருச்சூா் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அங்கு மரபணு பரிசோதனைக்காக அந்தப் பாகங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன என்று காவல் துறை தெரிவித்தது.

விபத்து நிகழ்ந்தபோது அங்கு சுமாா் 38 போ் இருந்திருக்கக் கூடும் என்று காவல் துறை சந்தேகிக்கும் நிலையில், 14 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேரைக் காணவில்லை.