

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டப் பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கி முதல் 2 மணி நேரத்தில் 23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
126 தொகுதிகள் கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. அவற்றில், முதல்கட்டமாக 65 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வரும் 11-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கி 7 மணி முதல் 9 மணி வரை 23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள 286-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.