புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

சரிதா நாயர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார் உம்மன் சாண்டி

சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் மீது, கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Updated On :8 ஏப்ரல் 2016, 12:29 pm

திருவனந்தபுரம்  : சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் மீது, கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உம்மன் சாண்டி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சரிதா நாயர் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து கேரள நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறான தகவலைக் கூறியதாக சரிதா நாயர் மீதும், இது தொடர்பான செய்தியை வெளியிட்ட 2 மலையாளம் நாளிதழ்களின் செய்தி ஆசிரியர்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

முன்னதாக, சூரிய மின்தகடு முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர், கடந்த 2013ஆம் ஆண்டு போலீஸ் காவலில் இருந்தபோது 23 பக்க கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதில், உம்மன் சாண்டி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்ததாக மலையாள செய்தி ஊடகம் ஒன்றில் அண்மையில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.