தில்லி வாகனக் கட்டுப்பாடு: வாரத்தின் முதல் நாளில் கடும் வாகன நெரிசல்

தில்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டம் இரண்டாவது முறையாக நடைமுறைக்கு வந்து, இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால், கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
தில்லி வாகனக் கட்டுப்பாடு: வாரத்தின் முதல் நாளில் கடும் வாகன நெரிசல்
Updated on
1 min read

புது தில்லி

தில்லியில் வாகனக் கட்டுப்பாடு திட்டம் இரண்டாவது முறையாக நடைமுறைக்கு வந்து, இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால், கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராயின் காரில் இன்று அலுவலகத்துக்கு வந்தார்.

தில்லியில் ஒற்றைப்படை - இரட்டைப் படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஏப்ரல் 15ம் தேதியே நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அன்றைய தினத்தில் இருந்து விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால், இன்றுதான் அதன் முதல் சோதனை நாள் என்றேக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை முக்கிய சாலைகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்பட்டது. பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com