ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்: வெங்கையா நாயுடு கருத்து

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்: வெங்கையா நாயுடு கருத்து
Updated on
1 min read

புது தில்லி: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

தெலங்கானாவை பிரிக்கும் போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதி அளித்த காங்கிரஸ் அரசு, 2014ம் ஆண்டு வரை அதனை செய்யாமல் காலம் கடத்தியது ஏன் என்றும் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும், ஆந்திர மாநிலம் மீது அக்கறை இருப்பது போல காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் அரசு முதலைக் கண்ணீர் வடிக்கிறது என்றும் வெங்கையா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com