மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

நவம்பர் 8-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து பொதுமக்களால் வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :7 டிசம்பர் 2016, 10:48 am

மும்பை: நவம்பர் 8-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து பொதுமக்களால் வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

மாதத்திற்கு இருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை பரிசீலனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிகளுக்கான வட்டிவிகிதம் 6.5 சதவீதமாக அப்படியே நீடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதே போல் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு முன்னோட்டமானது 7.6 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டது.  

அதன் பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசும் பொழுது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆர்.காந்தி, ' பண மதிப்பு நீக்க நடவடிக்கைகயை அடுத்து இதுவரை 11.85 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளன' என்ற தகவலை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.