புது தில்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்ப உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 10ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் இன்று வீடு திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் உள்ளிட்டோரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.