எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பிருப்பதாக சு.வெங்கடேசன் பேச்சு

News image

சு. வெங்கடேசன் எம்.பி. - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:17 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசியதாவது, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கும் தொகுதி மறுவரையறைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க பாஜக செய்திருக்கும் ஒரு சூழ்ச்சிதான்.

மகளிர் இடஒதுக்கீடு என்ற கேடயத்தைப் பயன்படுத்தி, தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருகின்றனர். மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதனை இப்போதிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நிறைவேற்றலாம்.

இவர்கள் தொகுதி மறுவரையறை என்ற மிகுந்த சிக்கல் நிறைந்த பிரச்னையை, 50 ஆண்டுகளான மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மீண்டும் ஆரம்பித்து, ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு என்று அரசியல் சாசனம் கூறுகிறது. அது ஒரு முக்கியமான கோட்பாடு. இன்னொரு புறம், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அசமத்துவமான நிலை. இவை இரண்டுக்குமிடையில் ஒரு பெரிய முரண் இருக்கிறது. ஒரு பெரிய சவால் இருக்கிறது. இது இந்தியாவில் மிக முக்கியமான பிரச்னை.

இந்தப் பிரச்னையை, அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஒன்றுபட்ட ஓர் ஆலோசனையை உருவாக்கியபிறகு, அதனை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதன் மூலமாகவே இதனை நிறைவேற்ற முடியும்.

இது தென் மாநிலங்கள் மீது பாஜகவுக்கு இருக்கிற வஞ்சகம். குறிப்பாக, மக்கள்தொகையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் தண்டனையும்தான் இது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் 21 லட்சம் வாக்குப்பதிவுகள்தான் கூடியிருக்கின்றன.

அதற்கு முன்பு நடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், 40 லட்சம் கூடியுள்ளது. அப்படி பார்க்கும்போது, முன்பு நடந்த தேர்தல்களில் 40 லட்சம் கூடியிருக்கிறது என்றால், இந்தத் தேர்தலில் வெறும் 21 லட்சம்தான் கூடியிருக்கிறது.

சதவிகித உயர்வுக்குக் காரணம் எஸ்ஐஆர். மற்றபடி, சராசரி உயர்வு அப்படியேதான் பிரதிபலித்துள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. இயல்பாகவே, 3 அல்லது 4 அணிகள் போட்டியிடும்போது, ஆளுங்கட்சி அணியின் வாக்கு சதவிகிதம், வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கும். ஆகையால், வெற்றி மிக அதிகமாக கிடைக்கும். இந்த அணி மிகப்பெரிய வலுவான அணி " என்று தெரிவித்தார்.

Summary

Victory Prospects Favor the DMK Alliance: Su. Venkatesan MP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.