ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்!
நாடு முழுவதும் ஊழியர்களுக்கான சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.


புதுதில்லி: நாடு முழுவதும் ஊழியர்களுக்கான சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.
தில்லியியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஊழியர்களுக்கான சம்பள பரிவர்த்தனையில் ஒரு கூடுதல் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரூபாய் நோட்டுக்கள் மூலமாக நேரடியாக சம்பளம் வழங்கும் முறையும் பின்பற்றப்படும்.
ஊழியர்கள் வங்கி மூலம் வேறு பணப்பரிவர்தனைகளை நிகழ்த்த வசதியாக இந்த வசதி கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே நேரத்தில் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்போது செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திருத்தம் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்று கட்டாய ப்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...