குஜராத்: ஆற்றில் பஸ் கவிழ்ந்து 20 பேர் சாவு

குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் இறந்தனர்.
Updated on
1 min read

நவ்சாரி மாவட்டத்தின் சுபா கிராமம் அருகே பூர்ணா நதியின் மேல கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பேருந்து எதிர்பாரதவிதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

இதுவரை 20 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எம்.எஸ்.பாரதா கூறினார்.

நவ்சாரியிலிருந்து உகாய் செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் எவ்வளவு பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com