டெராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழைக்கு இதுவரை 30 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பித்தோராகர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுவா கிராமத்தில் விவசாய பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு நாசமாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54 மீ.மி மழை பதிவாகியுள்ளது.
தால்-முன்ஸ்யாரி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 12-க்கு மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் அடித்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிப்போர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மீட்புப் பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு உள்துறை அமைச்சர் ராஜ்சிங் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.