புது தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் என்னால் பங்கேற்க இயலவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது....
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. இதில், 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
ஹங்கேரி வெளியுறவு அமைச்சரை இன்று சந்திக்க உள்ளதால், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை.
சக அமைச்சர்கள் குழுவில் சேர்ந்த புதிய அமைச்சர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.