நொய்டா மேலாண்மை இணையதளத்தை முடக்கி பாக்கிஸ்தான் ஹேக்கர்கள் அட்டூழியம்

நொய்டா மேலாண்மை நிறுவன இணையதளத்தை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.
Updated on
1 min read

நொய்டா: நொய்டா மேலாண்மை நிறுவன இணையதளத்தை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

சட்டம், வடிவமைப்பு, மேலாண்மை ஆகிய நிறுவனங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். சீன கொடியை ஒத்திருக்கும் பாகிஸ்தான் நாட்டு கொடியையும், மற்ற நாட்டின் கொடியையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை இரவு முதல் இணையதளத்தை முடக்கி, "பாகிஸ்தானிய ஹேக்கர்கள் மிஸ்டர் ஜி" என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளனர்.

ஹேக்கர்கள் இந்தியாவை அவமதிப்பதை போன்று பல ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால், இந்த இணையதளம் ஆப்லைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com