ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் செல்லும் பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.
அனந்தநாக் மாவட்டத்தில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பக்தர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.