71 சிறார்கள் மீட்பு: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

ஹவுரா - வாஸ்கோடகாமா அமராவதி விரைவு ரயிலில் வந்த 71 சிறார்களை விசாகபட்டினம் மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் மீட்டுள்ளனர்.
Updated on
1 min read

விசாகப்பட்டினம்: ஹவுரா - வாஸ்கோடகாமா அமராவதி விரைவு ரயிலில் வந்த 71 சிறார்களை விசாகபட்டினம் மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் மீட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடத்தப்பட இருந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இயங்கும் மதரஸா மாணவர்கள் என்பதும், கோடை விடுமுறை முடிந்து ஹவுராவில் இருந்து திரும்பிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

சிறார்களை அழைத்து வந்த நான்கு பேரிடமும், எந்த அடையாள அட்டையும் இல்லாதது காவல்துறையினருக்கு சந்தேகத்தை எழுப்பியதால் சிறார்களை ரயில்வே காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

பிறகு ஹூப்ளியில் இருந்து வந்த மதரஸா அதிகாரிகள், உரிய விளக்கம் அளித்ததை அடுத்து, சிறார்களை பத்திரமாக அனுப்பி வைக்கும் பணியை ரயில்வே போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com