அமெரிக்காவில் இந்திய மென் பொறியாளர் கத்தியால் குத்திக் கொலை

அமெரிக்காவில், ஆந்திர மாநிலம் கச்சிகுடா பகுதியைச் சேர்ந்த 24 வயது மென்பொறியாளர் சங்கீர்த், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
Updated on
1 min read

ஹைதராபாத்: அமெரிக்காவில், ஆந்திர மாநிலம் கச்சிகுடா பகுதியைச் சேர்ந்த 24 வயது மென்பொறியாளர் சங்கீர்த், கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து சங்கீர்த்தின் உறவினர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ஆஸ்டின் பகுதியில் தங்கியிருந்த சங்கீர்த்தை, அவருடன் அறையில் ஒன்றாகத் தங்கியிருந்த ஹைதரபாத்தைச் சேர்ந்த சாய் சந்தீப் கௌட், கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இன்று காலை எங்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும், அமெரிக்காவில் இருக்கும் எங்களது உறவினர்கள், மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர் என்றார்.

கத்திக் குத்துக் காயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சங்கீர்த் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார், அவரைக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com