தாணே: தாணே மாவட்ட நீதிமன்றத்தில் பியூனாக பணியாற்றி வந்த ராஜூ கக்பாலேவுக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் ஒருவருக்கு, நீதிமன்ற ஆணையின் நகலை அளிக்க ரூ.800 லஞ்சமாகப் பெற்றதாக வழக்குத் தொடரப்பட்டது.
2008ம் மனுதாரரிடம் இருந்து லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக பிடிபட்ட ராஜூ கக்பாலேவுக்கு நீதிபதி வி.வி. பம்பார்டே ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.1000ம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.