ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

காஷ்மீரின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பு

குல்காம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகளின் பேரணியையொட்டி காஷ்மீரின் ஒரு சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On :27 ஜூலை 2016, 8:58 am

ஸ்ரீநகர்: குல்காம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகளின் பேரணியையொட்டி காஷ்மீரின் ஒரு சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 8ம் தேதி முதல் காஷ்மீரில் வன்முறை வெடித்ததை அடுத்து அமைதியை ஏற்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அனந்த்நாக் மாவட்டத்தை தவிர மற்ற பகுதிகளில்  நேற்று திரும்பப் பெறப்பட்டது. அனந்த்நாக் பகுதியில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் முதியவர் ஒருவர் பலியானார். 14 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக, ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி கடந்த ஜூலை 8ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று குல்காம் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அனந்தநாக் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.