

பனாஜி: பெண் பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமன் ஏர் விமானம், கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 7 மணியளவில், கோவாவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக டபோலின் விமான நிலைய இயக்குநர் புபேஷ் நேகி தெரிவித்துள்ளார்.
எனினும், அப்பெண்மணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். உடனடியாக அவரது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மரணம் அடைந்த பெண் பயணியின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பிறகு விமானம் திட்டமிட்டபடி கோவாவில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.