பனாஜி: பெண் பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, மஸ்கட்டில் இருந்து சென்னை வர வேண்டிய ஓமன் ஏர் விமானம், கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 7 மணியளவில், கோவாவில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக டபோலின் விமான நிலைய இயக்குநர் புபேஷ் நேகி தெரிவித்துள்ளார்.
எனினும், அப்பெண்மணி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். உடனடியாக அவரது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மரணம் அடைந்த பெண் பயணியின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பிறகு விமானம் திட்டமிட்டபடி கோவாவில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


