ஜெய்ப்பூர்: காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார்க் கதவுகள் பூட்டிக் கொண்டதில், இரண்டு சிறுவர்கள் மூச்சுத் திணறி பலியான சம்பவம் ஜெய்ப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியது.
புகியா கிராமத்தில், கிரண் பவ்ரா (8), விநோத் பவ்ரா (4) சிறுவர்கள், பக்கத்து வீட்டில் இருந்த காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கதவு பூட்டிக் கொண்டதில் மூச்சுத் திணறி இரண்டு சிறுவர்களும் பலியாகினர்.
வெகு நேரம் கழித்து, காரின் உரிமையாளர் காருக்குள் சிறுவர்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனால் அப்பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

