ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பூட்டிய காருக்குள் மூச்சுத் திணறி பலியான சிறுவர்கள்

காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார்க் கதவுகள் பூட்டிக் கொண்டதில், இரண்டு சிறுவர்கள் மூச்சுத் திணறி பலியான சம்பவம் ஜெய்ப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On :11 ஜூன் 2016, 10:35 am

ஜெய்ப்பூர்:  காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார்க் கதவுகள் பூட்டிக் கொண்டதில், இரண்டு சிறுவர்கள் மூச்சுத் திணறி பலியான சம்பவம் ஜெய்ப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

புகியா கிராமத்தில், கிரண் பவ்ரா (8), விநோத் பவ்ரா (4) சிறுவர்கள், பக்கத்து வீட்டில் இருந்த காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கதவு பூட்டிக் கொண்டதில் மூச்சுத் திணறி இரண்டு சிறுவர்களும் பலியாகினர்.

வெகு நேரம் கழித்து, காரின் உரிமையாளர் காருக்குள் சிறுவர்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனால் அப்பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.