ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ராணுவ சீருடைகள் கண்டெடுப்பு: வைஷ்ணோ தேவி கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மாதா வைஷ்ணோ தேவி கோயிலின் மலையடிவார நகரான காட்ராவில், இரண்டு ராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On :11 ஜூன் 2016, 12:13 pm

ஜம்மு: மாதா வைஷ்ணோ தேவி கோயிலின் மலையடிவார நகரான காட்ராவில், இரண்டு ராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் இன்று மேற்கொண்ட வழக்கமான ரோந்து பணியின்போது, ஜம்மு மாவட்டத்தின் கட்ரா நகருக்கு அருகே ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் உள்ள மேம்பாலத்துக்குக் கீழே இரண்டு ராணுவ சீருடைகள் மற்றும் காலணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கட்ரா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பாதுகாப்புப் படை அதிகாரி, கட்ரா முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை சந்தேகத்துக்கு இடமான வேறு எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. தற்போது வரை நகரத்தில் அமைதியான சூழலே நிலவுகிறது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.