காபூலில் தற்கொலை படையினர் தாக்குதல்: மோடி இரங்கல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலை படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Updated on
1 min read

புது தில்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலை படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த இரங்கல் செய்தியில்,

காபூலில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து மீது தற்கொலை படையினர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், 14 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் நேபால் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  இவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்ய நேபாள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com