தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உத்ரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தம்

உத்ரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக  அப்பகுதியில் சாலை போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On :29 ஜூன் 2016, 5:08 am

டெராடூன்: உத்ரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக  அப்பகுதியில் சாலை போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நந்தபிரயாகில் உள்ள கேதார்நாத் நெடுஞ்சாலை மற்றும் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சாலைகளை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. புனித யாத்திரைக்கு வந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அல்மோரா, பூரி, உத்திரகாசி, டெராடூன், உதம்சிங்நகர், சம்பாவாட், நைனிடால் ஆகிய மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.