தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தேச விரோத முழக்கத்துக்கும் கன்னையாவுக்கும் தொடர்பில்லை: தில்லி ஆட்சியர் அறிக்கை

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேச விரோத முழக்கத்துக்கும், மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையாவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று தில்லி அரசிடம், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.

News image
Updated On :3 மார்ச் 2016, 9:29 am

ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேச விரோத முழக்கத்துக்கும், மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையாவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று தில்லி அரசிடம், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது, புதன்கிழமை இரவு தில்லி அரசிடம் எனது அறிக்கையை சமர்ப்பித்தேன் என்று கூறியுள்ளார். எனினும், அறிக்கையில் கூறியிருப்பது குறித்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இது குறித்து பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்கள் கூட்டத்தில் பேசிய கன்னையாவுக்கும், தேச விரோத முழக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பல்கலை வளாகத்துக்குள் தேச விரோத முழக்கம் எழுப்பப்பட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜேஎன்யு விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தில்லி மாவட்ட ஆட்சியருக்கு, மாநில அரசு கடந்த பிப்ரவரி 13ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் கைது செய்யப்பட்ட கன்னையாவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.