ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேச விரோத முழக்கத்துக்கும், மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையாவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று தில்லி அரசிடம், மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது, புதன்கிழமை இரவு தில்லி அரசிடம் எனது அறிக்கையை சமர்ப்பித்தேன் என்று கூறியுள்ளார். எனினும், அறிக்கையில் கூறியிருப்பது குறித்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இது குறித்து பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்கள் கூட்டத்தில் பேசிய கன்னையாவுக்கும், தேச விரோத முழக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பல்கலை வளாகத்துக்குள் தேச விரோத முழக்கம் எழுப்பப்பட்டது. அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜேஎன்யு விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தில்லி மாவட்ட ஆட்சியருக்கு, மாநில அரசு கடந்த பிப்ரவரி 13ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதில் கைது செய்யப்பட்ட கன்னையாவுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


